புதிய அம்சங்களுடன் GPT-5 ஆகஸ்ட்டில் வெளியீடு

27 ஆடி 2025 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 127
OpenAI, அதன் புதிய GPT-5-ஐ 2025 ஆகஸ்ட் மாதம் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன் சமீபத்தில் இது தொடர்பாக உறுதிப்படுத்தினார்.
GPT-4 மாதிரியை விட, புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் GPT-5 வருவதாக தெரிகிறது.
முதலில் 2025 மே மாதம் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் உள்நாட்டு சோதனைகள் நீட்டிக்கப்பட்டதால் ஆகஸ்ட் மாதம் தான் அதிகாரப்பூர்வ வெளியீடு நடைபெற உள்ளது.
GPT-5-ல் “o3 reasoning” திறன்கள் நேரடியாக இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தர்க்கம், திட்டமிடல் மற்றும் பிரச்சனைகள் தீர்க்கும் திறன்கள் மேம்படும். இது தனி மாதிரிகளில் அம்சங்களை பிரிக்க வேண்டிய தேவையை குறைக்கும்.
GPT-5 உடன் சேர்த்து, அதன் சிறிய பதிப்புகள் "mini" மற்றும் "nano" எனும் பெயர்களில் வெளியாகும். இவை edge computing மற்றும் low-resource பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டவை.
"This Past Weekend" என்ற பொட்காஸ்டில் பேசும் போது, GPT-5 ஒரு தொழில்நுட்ப பிரச்சனையை தீர்த்தது, அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதாக சாம் ஆல்ட்மன் கூறினார். இது, மனிதர்களுக்கும் AI-க்கும் இடையே உள்ள திறன் வேறுபாட்டை உணர வைத்ததாக அவர் தெரிவித்தார்.