Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் போட்டிகள் இனி சின்னசாமி மைதானம் நடைபெறாதா...? நீதிமன்ற குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஐபிஎல் போட்டிகள் இனி சின்னசாமி மைதானம் நடைபெறாதா...? நீதிமன்ற குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

26 ஆடி 2025 சனி 05:36 | பார்வைகள் : 2064


பெங்களூரு சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்வுகளுக்கு பொருத்தமற்றது என நீதிமன்றம் குழு பிறப்பித்துள்ளது.

பெங்களூரின் புகழ்பெற்ற சின்னசாமி மைதானம், பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு பொருத்தமற்றது என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான ஒரு நீதித்துறை குழு அறிவித்துள்ளது.

இதனால், அரசின் ஒப்புதல் கிடைத்தால், இந்த மைதானம் இனி பெரிய நிகழ்வுகளை நடத்த தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிபதி டி குன்ஹாவின் அறிக்கை, கூட்ட நெரிசலே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறுகிறது.

காவல்துறையோ அல்லது நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ நெட்வொர்க்கோ, இந்தியா முழுவதிலும் இருந்து வந்த ஆர்சிபி ரசிகர்களின் பெரும் திரட்டலை எதிர்பார்க்கவில்லை.

குறிப்பாக, சின்னசாமி மைதானத்தின் "வடிவமைப்பு மற்றும் அமைப்பு" அதிக கூட்டம் நிறைந்த நிகழ்வுகளுக்கு பொருத்தமற்றது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது, மேலும் மைதான வளாகத்தில் பல சிக்கல்களை குறிப்பிடுகிறது.

இதன் விளைவாக, இந்தக் குழு இந்த மைதானத்தில் இனி "அதிக கூட்டம் நிறைந்த" நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டங்களின் போது, ஜூன் 4 ஆம் திகதி நடந்த சோகமான கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

 

 

11 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026