Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : குடும்ப வன்முறை… பெண் மீது சரமாரி தாக்குதல்!

பரிஸ் : குடும்ப வன்முறை…  பெண் மீது சரமாரி தாக்குதல்!

13 ஆவணி 2025 புதன் 17:54 | பார்வைகள் : 822


பரிசில் மற்றுமொரு குடும்ப வன்முறை பதிவாகியுள்ளது. பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Rue Vauvenargues வீதியில் உள்ள விடொன்றுக்கு இனு ஓகஸ்ட் 13, புதன்கிழமை காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். பெண் ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்தின் போது அவர்களது 3 வயது மகளும் இருந்ததாகவும், அவர் மருத்துவ பராமரிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் பல தடவைகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கணவர் கைது செய்யபட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்