Paristamil Navigation Paristamil advert login

வெப்பம்! - உட்சபட்ச ‘சிவப்பு’ எச்சரிக்கை!

வெப்பம்! - உட்சபட்ச ‘சிவப்பு’ எச்சரிக்கை!

30 ஆனி 2025 திங்கள் 18:19 | பார்வைகள் : 2445


 

நாளை ஜூலை 1 ஆம் திகதி நாடு முழுவதும் பலத்த வெப்பம் நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. 16 மாவட்டங்களில் உட்சபட்சமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பரிஸ் மற்றும் புறநகரங்கள் Paris, Essonne, Hauts-de-Seine, Seine-et-Marne, Seine-St-Denis, Val-d'Oise, Val-de-Marne, Aube, Cher, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Vienne, Yonne மற்றும் Yvelines ஆகியவற்றுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் அருந்துமாறும், வயோதிகர்கள் வெளியில் நடமாடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை அதிகபட்சமாக 41 வரை வெப்பம் பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்