Paristamil Navigation Paristamil advert login

வெப்பம்! - உட்சபட்ச ‘சிவப்பு’ எச்சரிக்கை!

வெப்பம்! - உட்சபட்ச ‘சிவப்பு’ எச்சரிக்கை!

30 ஆனி 2025 திங்கள் 18:19 | பார்வைகள் : 1249


 

நாளை ஜூலை 1 ஆம் திகதி நாடு முழுவதும் பலத்த வெப்பம் நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. 16 மாவட்டங்களில் உட்சபட்சமாக ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பரிஸ் மற்றும் புறநகரங்கள் Paris, Essonne, Hauts-de-Seine, Seine-et-Marne, Seine-St-Denis, Val-d'Oise, Val-de-Marne, Aube, Cher, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Vienne, Yonne மற்றும் Yvelines ஆகியவற்றுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் அருந்துமாறும், வயோதிகர்கள் வெளியில் நடமாடவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை அதிகபட்சமாக 41 வரை வெப்பம் பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்