முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி - இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் நீக்கம்

26 ஆனி 2025 வியாழன் 11:41 | பார்வைகள் : 127
இந்தியா அணியில் இருந்து ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா தரப்பில் 5 சதங்கள் அடித்திருந்தும், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பர்மிங்காமில், வரும் ஜூலை 2 ஆம் திகதி தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற, இந்திய அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
அதிகமான கேட்ச்களை விட்டது, கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவிலான ஓட்டங்களை சேர்க்காதது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும், வீரர்கள் தரப்பில் சில மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ஹர்ஷித் ராணாவை அணியில் இருந்து விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஹர்ஷித் ராணாவை அணியில் இணைத்த போதே, கடும் விமர்சனங்கள் எழுந்தது.
தற்போது 2வது டெஸ்ட் போட்டிக்காக பர்மிங்காம் சென்றுள்ள இந்திய அணியினருடன் ஹர்ஷித் ராணா செல்லவில்லை என்றும், நாடு திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக, முகேஷ் குமார் அணியில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.