கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி-ஜாம்பவான் கூறிய அறிவுரை
20 ஆனி 2025 வெள்ளி 12:18 | பார்வைகள் : 3897
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து எதிராக தலைமை தாங்கும் சுப்மன் கில்லுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸில் தொடங்குகிறது.
இளம் வீரர் சுப்மன் கில் (Shubman Gill) அணியை வழி நடத்த உள்ளார். முன்னதாக அவரை அணித்தலைவராக அறிவித்தபோது பல விமர்சனங்கள் எழுந்தன.
அவற்றை குறிப்பிட்டு ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். அவர் கில் குறித்து கூறுகையில்,
"இந்திய அணித்தலைவர் சுப்மன் கில்லுக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும். அவரை சுற்றி பல்வேறு கருத்துக்கள், விமர்சனங்கள் வரப்போவது எனக்கு தெரிகிறது.
இவையெல்லாம் அவரின் கவனத்தை சிதறடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அதை பற்றி சிந்திக்காமல், ஆட்டம் குறித்தும், அணியை குறித்தும் மட்டுமே சிந்திக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan