Paristamil Navigation Paristamil advert login

கடுகு காபி குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?

கடுகு காபி குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா  ?

11 ஆனி 2025 புதன் 16:54 | பார்வைகள் : 5941


காபி குடிப்பது பலரது வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்று. காலை எழுந்ததும் காபி குடிக்கவில்லை என்றால் அன்றைய பொழுதே அவர்களுக்கு தொடங்கியது போல இருக்காது. ஒரு சிலரோ ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காபியை குடிக்கின்றனர்.

இவ்வாறு காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காபியை விட முடியாதவர்கள் குடிப்பதற்காக புஷ்பவனம் குப்புசாமி எளிமையான பொருளை கொண்டு அதே நேரத்தில் ஆரோக்கியம் நிறைந்த காபியை செய்வது எப்படி என கூறியுள்ளார்.

அதற்கு உங்களுக்கு தேவையான ஒரே பொருள் கடுகு மட்டுமே. முதலில் கடுகை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சூடு ஆறிய பின்னர் அதனை சுடு தண்ணீரில் கலந்து தேவையான அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். ஆனால் இதனுடன் பால் சேர்க்க கூடாது என புஷ்பவனம் குப்புசாமி கூறியுள்ளார்.

இந்த காபியை குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் அவர் விளக்குகிறார். கடுகு காபியை குடிப்பதன் மூலம் சளி தொல்லையில் இருந்து விடுபட முடியும். இந்த கடுகு காபி நாள் முழுவதும் மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் எனவும் புஷ்பவனம் குப்புசாமி தெரிவித்துள்ளார்.

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026