Paristamil Navigation Paristamil advert login

13 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு! ஓய்வை அறிவித்த இந்திய வீரர்

13 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு! ஓய்வை அறிவித்த இந்திய வீரர்

6 ஆனி 2025 வெள்ளி 16:26 | பார்வைகள் : 118


இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானவர் பியூஸ் சாவ்லா (Piyush Chawla).

25 ஒருநாள் போட்டிகளில் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள சாவ்லா, மொத்தம் 35 சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20யை சேர்த்து) மட்டுமே விளையாடியுள்ளார்.
  
எனினும், தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், 2007ஆம் ஆண்டில் உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

36 வயதாகும் பியூஷ் சாவ்லா, 137 முதல்தர போட்டிகளில் 446 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் பியூஷ் சாவ்லா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாவ்லா பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் பியூஷ் சாவ்லா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாவ்லா பகிர்ந்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்