Paristamil Navigation Paristamil advert login

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவு - நால்வர் பலி

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவு - நால்வர் பலி

25 வைகாசி 2025 ஞாயிறு 16:53 | பார்வைகள் : 3139


சீனாவின் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

சீனாவின் குய்சோ மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் பயங்கர மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவில் சுமார் 10 வீடுகள் இடிந்து விழுந்து மண்ணில் புதைந்தன. சாங்ஷி நகரத்தில் இரண்டு உடல்களும், கிங்யாங் கிராமத்தில் இரண்டு சடலங்களும் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

மேலும் மண்சரிவில் சுமார் 19 பேர் மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகின்றது. அவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026