பரிஸில் ஒரு பூங்காவை ஆக்கிரமித்துள்ள மயிர்கொட்டிப் புழுக்கள்!!
21 வைகாசி 2025 புதன் 02:00 | பார்வைகள் : 4048
பரிஸ் வட பகுதியில் உள்ள மார்டின்-லூதர் கிங் பூங்காவில், இலைகளை அழிக்கக் கூடிய மயிர்கொட்டிப் புழுக்கள் மற்றும் லாவா முட்டைக் கூடுகள் பல நூற்றுக்கணக்கில் தோன்றியுள்ளன. இது தலைநகரைச் சேர்ந்த குடிமக்களில் சற்றே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகரின் 17வது மாவட்டத்தில் உள்ள மார்டின்-லூதர் கிங் (Martin-Luther King) பூங்காவின் உள்ளே, மரங்களிலும் பசுமை வளங்களில் பல பூச்சிகளால் நிரம்பிய தூசிப்படலங்கள் காணப்படுகின்றன.

இது பார்ப்பதற்கு அதிர்ச்சிகரமாக இருந்தாலும், சில இயற்கையை நேசிப்பவர்கள் கூறும் போல், இதனால் ஏற்படும் விளைவுகள், பூங்காவின அழகிய தோற்றத்திற்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தும். உண்மையில், இந்த கூட்டுகள் ஆபத்தானவை அல்ல, மேலும் இவை ஹைப்போனோமியூட் எனப்படும் மயிர்கொட்டிகள் பட்டாம்பூச்சியின் உருவாக்கத்திற்கான ஆரம்பமாகும்.

பூங்காவில், இந்த நிகழ்வை விளக்கும் விழிப்புணர்வு பலகைகள் உள்ளன. அதில்:
இந்த கொழுந்துகள் கூட்டு கூடுகளை உருவாக்கும் வகையில் ஒரு வலைபோன்ற சூழலை உருவாக்குகின்றன. அவற்றின் தாக்கத்தால் மரங்கள் அல்லது புதர்கள் இலைகளை முற்றிலும் இழக்கின்றன. சில நேரங்களில் இந்த வலைகள் அருகிலுள்ள செடிகளிலும் பரவலாம், ஆனால் அவை உணவாகச் சாப்பிடப்படுவதில்லை.' என எழுதப்பட்டுள்ளது
இந்த விளக்கங்கள், பொதுமக்களின் பயத்தையும் நீக்குகின்றன, மேலும் சூழலியல் நோக்கில் இந்த பரவலை வரவேற்கின்றன.
இது ஒரு உள்ளூர் நிகழ்வாகவும், பெரும்பாலும் தற்காலிகமாகவும் இருக்கும். ஏப்ரல்-மே மாதங்களில் இலைகளை இழக்கும் செடிகள் பெரும்பாலான நேரங்களில் மீண்டும் வளர்கின்றன. இவை மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல.அவற்றை வாழ விடுவது உயிரின வகைபற்றை மேம்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan