Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் அணி

இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இந்திய மகளிர் அணி

11 வைகாசி 2025 ஞாயிறு 17:43 | பார்வைகள் : 5700


இறுதிப்போட்டியில், இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முத்தரப்பு தொடரை வென்றுள்ளது.

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின.  

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 342 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, ஸ்மிருதி மந்தனா101 பந்துகளில் 116 ஓட்டங்களை எடுத்து, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 11வது சதத்தை பூர்த்தி செய்தார்.

தொடர்ந்து, 343 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, 48.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 245 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக, அணித்தலைவி சாமரி அத்தபத்து 55 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம், 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, முத்தரப்பு தொடரை வென்றுள்ளது.    

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்