பிரான்சில் இருந்து ஒரு போப்பாண்டவர் வந்தால் அதிசயம்!!

24 சித்திரை 2025 வியாழன் 07:50 | பார்வைகள் : 1156
பாப்பரசர் பிரோன்சுவாவின் மறைவையொட்டி, அடுத்த பாப்பரசர் தெரிவு செய்யவேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.
இந்தத் தெரிவுகளிள், பிரான்சில் மார்செய் நகரத்தின் பேராயர் ஜோன்-மார்க் அவெலின் மிகவும் முக்கிய இடத்தில் உள்ளார்.
ஆனால் இவரின் வயதும், இத்தாலி மொழியில பெரும் தேர்ச்சியில்லாமையும், ஒரு குறைபாடாக அமையலாம் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவரை இப்பொழுதே பாப்பரசராக மார்செய் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
«இவர் மிகவும் நல்லவர். அனைவரின் கோரிக்கைகளிற்கும் செவி சாய்ப்பவர். என்றும் புன்னகையுடன் இருப்பவர்» என மார்செய் மக்கள் புகழ்ந்துள்ளனர்.