ஐபிஎல் திருவிழா: ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடிக்கப் போகும் கோஹ்லி

21 பங்குனி 2025 வெள்ளி 10:29 | பார்வைகள் : 4554
ஐபிஎல் தொடரில் அதிகமுறை தொப்பியை வென்றவர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைக்க உள்ளார்.
2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் நாளை ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் பெங்களூரு அணி வீரர் விராட் கோஹ்லிக்கு மிகப்பெரிய சாதனை ஒன்றை தகர்க்கும் வாய்ப்பு உள்ளது.
அதாவது, அதிக ஓட்டங்கள் குவித்த வீரருக்கு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுகிறது.
இந்த தொப்பியை மூன்று முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை டேவிட் வார்னர் (David Warner) வைத்துள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோஹ்லி இருவரும் உள்ளனர். இவர்களில் கெய்ல் ஓய்வு பெற்றுவிட்டதால் வார்னரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட் கோஹ்லிக்கு உள்ளது.
இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. கோஹ்லி 252 போட்டிகளில் 8,004 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1