Paristamil Navigation Paristamil advert login

ஜாம்பவானின் வார்த்தைகள் பெரிய கௌரவம் - 177 ரன் விளாசிய இப்ராஹிம்

ஜாம்பவானின் வார்த்தைகள் பெரிய கௌரவம் - 177 ரன் விளாசிய இப்ராஹிம்

28 மாசி 2025 வெள்ளி 08:24 | பார்வைகள் : 1392


சச்சின் டெண்டுல்கர் தன்னை பாராட்டியதற்கு ஆப்கான் வீரர் இப்ராஹிம் ஜட்ரான் நன்றி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜட்ரான் 177 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் 325 ஓட்டங்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இப்ராஹிம் ஜட்ரானின் துடுப்பாட்டத்தைப் பாராட்டி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டார்.
 
அதில், "சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எழுச்சி ஊக்கமளிப்பதாக உள்ளது.

நீங்கள் அவர்களின் வெற்றிகளை இனி upsets என்று கூற முடியாது, அவர்கள் இப்போது இதை ஒரு பழக்கமாக மாற்றியுள்ளனர்.
 
சூப்பர் செஞ்சுரியை இப்ராஹிம் ஜட்ரான் தந்ததும் மற்றும் அஸ்மத் ஓமர்சாய் அற்புதமான 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதும், ஆப்கானிஸ்தானுக்கு மற்றொரு மறக்கமுடியாத வெற்றியை உறுதி செய்துள்ளது. சிறப்பாக விளையாடியிருக்கிறீர்கள்!" என கூறினார்.

இதற்கு நன்றி கூறி இப்ராஹிம் ஜட்ரான் வெளியிட்ட பதிவில், "தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் வகையில் துடுப்பாடிய மனிதரால் பாராட்டப்படுவது எவ்வளவு பெரிய கௌரவம். உங்கள் வார்த்தைகள் எனக்கும், ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டுக்கும் நிறைய அர்த்தம் தருகின்றன. நன்றி ஐயா" என தெரிவித்துள்ளார்.   

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்