புதிய வருமான வரி சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல்
13 மாசி 2025 வியாழன் 10:05 | பார்வைகள் : 4665
புதிய வருமான வரி சட்ட மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தாக்கல் செய்தார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் வருமான வரிச்சட்டம் 1961ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதாவது 60 ஆண்டுக்கும் மேல் ஆகி உள்ளது. இதில் பல ஆண்டுகளாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதன்படி இன்று (பிப்.,13) லோக்சபாவில் புதிய வருமான வரி மசோதாவை (2025) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், 'சிக்கலின்றி வருமான வரியை தாக்கல் செய்ய புதிய சட்ட மசோதா வழிவகை செய்யும். புதிய மசோதாவில் எளிமைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன' என்றார். இந்த மசோதா ஆய்வுக்காக பார்லி நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளது.
சிறப்பம்சங்கள் இதோ!
* மொழி எளிமைப்படுத்தல் காரணமாக சட்டத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும், புரிந்துகொள்ள உதவும். இது சர்ச்சைகள், வழக்குகளைக் குறைக்கும். வரி செலுத்துவோருக்கு நம்பிக்கை அளிக்கும்.
* படிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ள நீளமான சொற்களுக்கு பதில் சிறிய சொற்கள் இடம்பெற்றுள்ளன.
* புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்கள் இருக்கிறது.
* வருமான வரிச் சட்டம் 1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட போது, 880 பக்கங்கள் கொண்டதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan