புதுவருட இரவில் 984 வாகனங்கள் எரிப்பு.. 420 பேர் கைது!!
 
                    1 தை 2025 புதன் 17:32 | பார்வைகள் : 12671
டிசம்பர் 31 - ஜனவரி 1 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
நாட்டின் பல நகரங்களில் பலர் இதுபோன்ற சமூகவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளன. உள்துறை அமைச்சகம் (ministère de l'Intérieur) வெளியிட்ட தகவல்களின் படி, நேற்றைய இரவில் 984 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. முந்தைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
2023 ஆம் ஆண்டில் 745 வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்தன.
அதேவேளை, நேற்று வாகன எரிப்பில் ஈடுபட்டதற்காக மொத்தமாக
420 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 310 பேர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan