பனிப்பொழிவு : 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

11 தை 2025 சனி 19:03 | பார்வைகள் : 7046
நாளை, ஜனவரி 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடும் பனிப்பொழிவு காரணமாக 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Doubs, Creuse, Corrèze, Cantal, Aveyron, Lozère, Haute-Loire மற்றும் Loire ஆகிய எட்டு மாவட்டங்களில் பலத்த பனிப்பொழிவு பதிவாகும் எனவும், அங்கு -6°C வரை கடும் உறை குளிர் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அங்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வீடற்றவர்கள், அகதிகள் போன்றோர் தங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடற்பயிற்சி நிலையங்கள் போன்றன ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. குறித்த மாவட்டங்களில் வசிக்கும் வயதானவர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025