நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
8 தை 2025 புதன் 05:34 | பார்வைகள் : 6967
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.
நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதனை தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan