மின்சார மகிழுந்துகள் வாங்குபவர்களுக்கான கொடுப்பனவுகள் குறைப்பு!!
26 கார்த்திகை 2024 செவ்வாய் 16:08 | பார்வைகள் : 11190
மின்சாரத்தில் இயங்கும் மகிழுந்துகளை (Voitures électriques) வாங்குபவர்களுக்கு அரசு வழங்கி வந்த கொடுப்பனவுகள் குறைக்கப்பட உள்ளன.
மின்சார மகிழுந்துகளை வாங்குபவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக €1,000 யூரோக்களில் இருந்து 7,000 யூரோக்கள் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு முதல் அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட உள்ளன. 7,000 யூரோக்கள் வழங்கப்பட்ட இடத்தில் 4,000 யூரோக்கள் வழங்கப்பட உள்ளன.
4,000 யூரோக்கள் வழங்கப்பட்டவர்களுக்கு 2,000 யூரோக்களாகவும் குறைக்கப்பட உள்ளன.
ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு முதல் இந்த கொடுப்பனவுகள் குறைக்கப்பட உள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் மிக இறுக்கமான சேமிப்பு ஒன்றை கொண்டுவரும் நோக்கில் புதிய அரசாங்கம் போராடி வருகிறது. அதன் ஒரு அங்கமாக இந்த கொடுப்பனவு குறைப்பு இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan