Paristamil Navigation Paristamil advert login

குதிரைகளை பலியெடுக்கும் 'ரைனோப்நிமோனியா' - எச்சரிக்கை!!

குதிரைகளை பலியெடுக்கும் 'ரைனோப்நிமோனியா' - எச்சரிக்கை!!

23 கார்த்திகை 2024 சனி 08:54 | பார்வைகள் : 5050


குதிரைகளின் உயிரைப் பறிக்கும் 'ரைனோப்நிமோனியா' (rhinopneumonia) எனும் தொற்று நோய் பிரான்சில் வேகமாக பரவிவருகிறது.

பல்வேறு மாவட்டங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. ஐந்து மாவட்டங்களுக்கு விழிப்புநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குதிரை பயிற்சிகளில் ஈடுபடவேண்டாம் எனவும், குதிரைகளை லாயங்களில் இருந்து வெளியே அழைத்துச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த வைரஸ் தொற்றானது குதிரைகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்