Paristamil Navigation Paristamil advert login

9 பிள்ளைகளை பெற்ற பெண்ணின் வினோத ஆசை...! 

9 பிள்ளைகளை பெற்ற பெண்ணின் வினோத ஆசை...! 

20 கார்த்திகை 2024 புதன் 12:17 | பார்வைகள் : 3761


சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 9 பிள்ளைகளை பெற்ற பின்னும், மேலும் 4 பிள்ளைகளை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜவோ. இவருக்கும் தியான் என்ற பெண்ணுக்கும் 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 

இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதனைத் தொடர்ந்து, மேலும் பிள்ளைகளை பெற்றுக் கொண்டதன் மூலம் இந்த தம்பதிக்கு தற்போது 9 பிள்ளைகள் உள்ளன.


தியான் அடுத்தடுத்த பிள்ளைகளின் பிறப்பால் உடல் பலவீனம் அடைந்துள்ளார். ஆனாலும் மேலும் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள அவர் விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தியான் கூறுகையில், "என் குழந்தைகளில் 2 பேர் ஒரே ராசிக்காரர்கள். மீதமுள்ள 7 பேர் வெவ்வேறு ராசிகளை கொண்டவர்கள். எனவே சீன சாஸ்திரத்தின்படி, 12 ராசிகளை குறிக்கும் வகையில் மேலும் 4 பிள்ளைகளை பெற்றுக்கொள்வேன்" என தெரிவித்துள்ளார்.

தியான் மேலும் பிள்ளைகளை பெற்றுக் கொள்வதாக கூறியதும், அதற்கான காரணத்தை அவர் குறிப்பிட்டதும் வைரலாகியுள்ளது.     

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026