Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

ஒரு இலக்கத்தை தவறவிட்டு 168 மில்லியன் யூரோக்களை இழந்த இருவர்!!

ஒரு இலக்கத்தை தவறவிட்டு 168 மில்லியன் யூரோக்களை இழந்த இருவர்!!

20 கார்த்திகை 2024 புதன் 10:34 | பார்வைகள் : 9189


யூரோ மில்லியன் அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில், நேற்று நவம்பர் 19, செவ்வாய்க்கிழமை விளையாடிய இருவர், ஒரு இலத்தினால் மிகப்பெரிய தொகையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

168 மில்லியன் யூரோக்கள் அதிஷ்ட்ட தொகைக்காக நேற்றைய தினம் சீட்டிழுப்பு இடம்பெற்றது. ஏழு இலக்கங்களை சரியாக கணித்தால் அந்த தொகை வெற்றிகொள்ளலாம் எனும் நிலையில், இரு நபர்கள் முதல் ஆறு இலக்கங்களையும் சரியாக கணித்துள்ளனர். ஏழாவது இலக்கம் அவர்களுக்கு கைகூடவில்லை. இதனால் 168 மில்லியன் யூரோக்கள் பணத்தினை பெறும் வாய்ப்பினை இழந்தனர்.

அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆறுதல் பரிசாக 437,600.40 யூரோக்கள் வழங்கப்பட்டது.

அதேவேளை, முதல் ஐந்து இலக்கங்களை சரியாக கணித்த 11 பேருக்கு 18,595.30 யூரோக்கள் வீதம் வழங்கப்பட்டது.

அடுத்தகட்ட சீட்டிழுப்பு நாளை மறுநாள் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது. வெற்றித்தொகையாக 189 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட உள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்