மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு.. €56,000 யூரோக்கள் இழப்பீடு!!
19 கார்த்திகை 2024 செவ்வாய் 20:00 | பார்வைகள் : 13461
சில வருடங்களுக்கு முன்னர் நாடு முழுவதும் மஞ்சள் மேலங்கி போராட்டம் (gilets jaunes) இடம்பெற்று வந்திருந்தமை அறிந்ததே. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஒருவருக்கு €56,000 யூரோக்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Bourges நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கலவரம் அடக்கும் காவல்துறையினர் இறப்பர் குண்டுகளாலான (LBD) துப்பாக்கியால் சுட்டதில் நபர் ஒருவர் காயமடைந்தார். 36 வயதுடைய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டார்.
பின்னர் அவர் தொடுத்த வழக்கினை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு இழப்பீடாக 56,000 யூரோக்கள் வழங்கவேண்டும் என காவல்துறையினருக்கு பணிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan