தீயணைப்பு துறைக்கு வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தம்!
16 கார்த்திகை 2024 சனி 12:46 | பார்வைகள் : 8305
தீயணைப்பு துறைக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட 1.5 மில்லியன் யூரோக்கள் உதவித்தொகையை, இல் து பிரான்சுக்கான மாகாணசபை நிறுத்தியுள்ளது.
நேற்று நவம்பர் 15, வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை இல் து பிரான்ஸ் மாகாணசபை அறிவித்துள்ளது. உடனடியாகவே இந்த அறிவிப்பு கண்டனங்களுக்கு உள்ளானது. ”கடந்த சில மாதங்களாக பரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் மாகாணம் எதிர்கொண்ட வெள்ளப்பெருக்கினை முன் வரிசையில் நின்று எதிர்கொண்ட தீயணைப்பு படையினருக்கான உதவிகளை வழங்குவதை தான் நீங்கள் நிறுத்தியுள்ளீர்கள். அதனை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?” என தீயணைப்பு துறையினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த ஆண்டுக்கொடுப்பனவுகளை வழங்க மாகாணசபை தீர்மானித்து, வழங்கி வந்திருந்தது. இந்நிலையில், இந்த கொடுப்பனவுகள் வழங்கும் திட்டம் நடப்பு ஆண்டுடன் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan