உழவு இயந்திரங்களுடன் மீண்டும் வீதிக்கிறங்கும் விவசாயிகள்!

16 கார்த்திகை 2024 சனி 07:00 | பார்வைகள் : 6818
விவசாயப்போராட்டம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்துள்ளது. உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி, போக்குவரத்தை நிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
நாளை, நவம்பர் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி இந்த ஆர்ப்பாட்டம் Vélizy-Villacoublay (Yvelines) நகரை ஊடறுக்கும் RN118 சாலையில் இடம்பெற உள்ளது. பரிசை நோக்கி வரும் இந்த பாதை, மறுநாள் திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி வரை தடைப்பட உள்ளது.
விவாசாயிகள் கடந்த மாதங்களில் நாடளாவிய ரீதியில் பல்வேறு சாலை மறியல் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். கடந்த குளிர்காலத்தின் போது பிரதமர் கப்ரியல் அத்தால், விவசாயிகளுக்கு என 70 நலத்திட்டங்கள் அடங்கிய புதிய சலுகைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025