போதைப்பொருள் கடத்தல்... - துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி..!!

15 கார்த்திகை 2024 வெள்ளி 11:30 | பார்வைகள் : 6851
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இரு குழுக்களுக்கிடயே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
நவம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் மார்செ நகரில் இடம்பெற்றுள்ளது. 14 ஆம் வட்டாரத்தின் Rue de la Carrière வீதியில் உள்ள ஒரு மதுபான விடுதி ஒன்றுக்கருகே நின்றுகொண்டிருந்த மூவர் கொண்ட குழுவை நோக்கி அங்குவந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். இவர்களும் பதில் சூடு நடத்தினர்.
இதில் 30 வயதுகளையுடைய இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் காயமடைந்துள்ளார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025