RSA கொடுப்பனவுகளை தடுக்க மாவட்ட ரீதியிலான அதிகாரம்!

15 கார்த்திகை 2024 வெள்ளி 08:02 | பார்வைகள் : 8129
revenu de solidarité active எனப்படும் குடும்பநல வருமானங்கள் தொடர்பில் மாவட்ட நிர்வாக சபை முடிவெடிக்க முடியும் எனும் அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த 2025 ஆம் அண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் இந்த அதிகாரம் வழங்கப்பட உள்ளதாகவும், ஜனவரி 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் பல பில்லியன் யூரோக்களை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக, revenu de solidarité active கொடுப்பனவுகள் தொடர்பில் மாவட்ட நிர்வாகசபை முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாக சபையினால் இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய வரவுசெலவுத்திட்டத்தில் 10 பில்லியன் யூரோக்கள் வரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 5 பில்லியன் யூரோக்கள் சேமிக்கப்படவேண்டிய பொறுப்பினை மாவட்ட நிர்வாக சபைகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025