Sarcelles : இளைஞன் படுகொலை..!

13 கார்த்திகை 2024 புதன் 18:45 | பார்வைகள் : 7967
17 வயதுடைய இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். Sarcelles (Val-d'Oise) நகரில் இச்சம்பவம் நேற்று நவம்பர் 12, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
மாலை 5 மணி அளவில் Avenue de la Division-Leclerc வீதியில் வைத்து குறித்த இளைஞனை சூழ்ந்துகொண்ட சிலர், அவரை தாக்கியுள்ளனர். கத்தி ஒன்றினால் குத்தப்பட்டதில், படுகாயமடைந்து மயங்கி விழுந்துள்ளார்.
தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
காயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாலை 5.30 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பி ஓடியுள்ள தாக்குதலாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025