Paristamil Navigation Paristamil advert login

வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!!

வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!!

12 கார்த்திகை 2024 செவ்வாய் 20:00 | பார்வைகள் : 15497


வீடொன்றில் இருந்து 2 தொடக்கம் 13 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Haute-Savoie மாவட்டத்தில் உள்ள Taninges எனும் சிறு நகர்ப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் தந்தை ஒருவர், தனது 2, 11 மற்றும் 13 வயதுடைய பிள்ளைகள் சடலமாக கிடப்பதை பார்த்துவிட்டு காவல்துறையினரை அழைத்துள்ளார். உடனடியாக அங்கு அவசர மருத்துவக்குழு அனுப்பப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டன.  சம்பவத்தின் போது அப்பிள்ளைகளின் தாயார் வீட்டில்  இருக்கவில்லை எனவும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்