Philippine கொலை வழக்கு : குற்றவாளியை பிரான்சுக்கு அழைத்துவர அனுமதி!
30 ஐப்பசி 2024 புதன் 12:02 | பார்வைகள் : 12910
பரிசில் Philippine எனும் இளம் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலப்பட்டிருந்த வழக்கில் முக்கிய குற்றவாளி சுவிட்சர்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். 22 வயதுடைய குறித்த குற்றவாளியை பிரான்சுக்கு அழைத்துவருவதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில், சுவிட்சர்லாந்து அரசு தற்போது அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த Taha O எனும் குறித்த நபர் Bois de Boulogne பூங்காவில் வைத்து 19 வயதுடைய Philippine எனும் இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அவரை கொலை செய்துவிட்டு, அவரது சடலத்தை புதைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்தார். மூன்று நாட்களின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள Taha O, விரைவில் பிரான்சுக்கு அழைத்துவரப்பட உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan