Val-d'Oise : கணவருக்கு கத்திக்குத்து.. மனைவி கைது..!!
.jpg)
29 ஐப்பசி 2024 செவ்வாய் 15:32 | பார்வைகள் : 12028
கணவரைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முற்பட்ட பெண் ஒருவரை Val-d'Oise மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒக்டோபர் 29 ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Frépillon (Val-d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய பெண் ஒருவர் அவரது 44 வயதுடைய கணவரைக் கத்தியால் குத்தியுள்ளார். வாக்குவாதம் ஒன்றின் முடிவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டு அப்பெண் கைது செய்யப்பட்டார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025