நோர்து-டேம் தேவாலய திறப்புவிழா.. பாப்பரசர் பங்கேற்கவில்லை!!??
14 புரட்டாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 9938
நோர்து-டேம் தேவாலய திறப்புவிழாவுக்கு இன்னும் 100- க்கும் குறைவான நாட்களே உள்ளன. இந்த நிகழ்வுக்கு பரிசுத்த பாப்பரசர் ( pape François) அழைக்கப்படுவார் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் நிகழ்வுக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளார். தற்போது தென்கிழக்கு ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் Jorge Bergoglio, அங்கு வைத்து ஊடக சந்திப்பில் கலந்துகொண்டார். அதன் போது. “நான் டிசம்பரில் பரிசுக்கு செல்லப்போவதில்லை!” என அறிவித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி நோர்து-டேம் தேவாலயம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஐந்து வருடங்களாக திருத்தப்பணிகள் இடம்பெற்று, வரும் டிசம்பர் 7 ஆம் திகதி தேவாலயம் முற்று முழுதாக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan