Paristamil Navigation Paristamil advert login

45 நிமிடங்களில் DNA சோதனை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்

45 நிமிடங்களில் DNA சோதனை செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள்

7 புரட்டாசி 2024 சனி 09:51 | பார்வைகள் : 4144


டி.என்.ஏ (DNA Test) சோதனையை வெறும் 45 நிமிடங்களில் செய்யக்கூடிய புதிய தடயவியல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மேம்பட்ட ஆய்வக வசதி தேவைப்படாமல் டி.என்.ஏ சோதனை செய்ய முடியும் என்று ஆராய்ச்சி குழு உறுப்பினர்களில் ஒருவரான முகமது எல்சயீத் கூறினார்.

துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணவும், குற்றத்தை நிரூபிக்கவும் டி.என்.ஏ சோதனை ஒரு முக்கியமான அடிப்படையாகும்.


இந்த நோக்கத்திற்காக, பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.

ஆய்வகத்தில் உள்ள வல்லுநர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் டி.என்.ஏ மாதிரிகளை மிகவும் சிக்கலான செயல்முறையின் மூலம் பிரிக்க வேண்டும்.


அதன் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரின் டி.என்.ஏவை பகுப்பாய்வு செய்யலாம். இந்த செயல்முறை சில நாட்கள் எடுக்கும்.

ஆனால், "நாங்கள் உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வெறும் 45 நிமிடங்களில் டி.என்.ஏ மாதிரிகளை தனிமைப்படுத்தி சோதிக்க முடியும்" என்று முகமது எல்சயீத் (Mohamed Elsayed) கூறினார்.

சேகரிக்கப்பட்ட மாதிரியிலிருந்து இரண்டு நபர்களின் டி.என்.ஏவை டிஜிட்டல் மைக்ரோஃப்ளூயிடிக்ஸ் பயன்படுத்தி அவர்களின் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக பிரிக்க முடியும்.

இதற்காக மேம்பட்ட ஆய்வகம் தேவையில்லை என்றும் அவர் கூறினார். இந்த விவரங்கள் 'அட்வான்ஸ்டு சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்