பரிசில் இருந்து கொங்கோவுக்கு.. 100,000 குரங்கம்மை தடுப்பூசி..!

4 புரட்டாசி 2024 புதன் 18:54 | பார்வைகள் : 9048
ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, தடுப்பூசிகளை வழங்குவதற்கு பிரான்ஸ் உறுதியளித்திருந்தது.
இந்நிலையில், நாளை செப்டம்பர் 5 ஆம் திகதி வியாழக்கிழமை முதல்கட்ட தடுப்பூசிகளை கொங்கோவுக்கு (République démocratique du Congo) அனுப்பி வைக்க உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு இந்த முதல்கட்ட தடுப்பூசிகள் அங்கு விநியோகிக்கப்படும் என பரிஸ் மருத்துவமனைகளுக்கான சபை ( AFP) அறிவித்துள்ளது.
ஆபிரிக்காவில் இதுவரை 17,500 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 629 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையிலேயே தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றிய மருந்துகள் கூட்டமைப்பு சபை வழியாக ஆபிரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது பிரான்ஸ்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025