பரிஸ் : பாலியல் தொழிலாளி மீது தாக்குதல்.. கொள்ளை!
2 புரட்டாசி 2024 திங்கள் 16:45 | பார்வைகள் : 9663
பாலியல் தொழிலாளி பெண் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
32 வயதுடைய உக்ரேனைச் சேர்ந்த குறித்த பெண், நேற்று செப்டம்பர் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் இருக்கும் போது, வாடிக்கையாளர்கள் போல் இருவர் வருகை தந்துள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை விட்டுக்குள் வைத்து பூட்டி, அவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதோடு அவர் மீது தாக்குதலும் மேற்கொண்டு, அவரிடம் இருந்து பணத்தையும் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அப்பெண்ணின் அறைய பகிர்ந்துகொண்டிருக்கும் சக தோழிகள் காவல்துறையினரை அழைத்து அவரை மீட்டனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

























Bons Plans
Annuaire
Scan