பரிஸ் : பிரித்தானிய பெண் மீது பாலியல் வல்லுறவு... வழக்கு பதிவு!
2 புரட்டாசி 2024 திங்கள் 16:14 | பார்வைகள் : 8628
பிரித்தானியாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 வயதுடைய பெண் ஒருவர் பரிசின் 8 ஆம் வட்டார காவல்நிலையத்தில் கடந்த ஓகஸ்ட் 31 ஆம் திகதி சனிக்கிழமை வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார். முந்தைய நாள் 30 ஆம் திகதி இரவு குறித்த பெண் பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் நண்பர்களுடன் உணவு அருந்திவிட்டு, அங்கிருந்து 16 ஆம் வட்டாரத்தில் உள்ள இரவு விடுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு, shisha புகைத்துக்கொண்டிருந்த அவர் திடீரென மயக்கமடைந்ததாகவும், மயக்கம் தெளிந்து எழுந்தபோது தனியே ஒதுக்கப்பட்ட இடத்தில் மெத்தை ஒன்றின் மேல் கிடந்ததாகவு, அதன் பின்னரே தாம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதை தெரிந்துகொண்டதாகவும் அவர் தனது வழக்குப் பதிவில் தெரிந்துகொண்டார்.
அப்பெண்ணின் நண்பர்களோடு இணைந்து 8 ஆம் வட்டார காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் குறித்த பெண். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan