Paristamil Navigation Paristamil advert login

வெர்சாய் மாளிகையில் பரபரப்பு.. தீவிரமாக துழாவிய அதிரடிப்படையினர்...!

வெர்சாய் மாளிகையில் பரபரப்பு.. தீவிரமாக துழாவிய அதிரடிப்படையினர்...!

4 ஆடி 2024 வியாழன் 16:58 | பார்வைகள் : 12325


இன்று ஜூலை 4, பிற்பகல் வேளையில் வெர்சாய் மாளிகைக்குள் நுழைந்த அதிரடிப்படையினர், மாளிகை பகுதி பகுதியாக துழாவி, தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். 

பல நூறு பார்வையாளர்கள் வெர்சாய் மாளிகைக்குள் (Palace of Versailles) இருந்து வெளியேற்றப்பட்டு, GIGN அதிரடிப்படையினர் தேடுதல் மேற்கொண்டனர். ஆனால் அங்கிருந்து எந்த வித சந்தேகத்துக்கிடமான பொருட்களையும் கைப்பற்றவில்லை.

நூற்றுக்கணக்கான மக்கள் வெர்சாய் மாளிகைக்கு முன்பாக குவிந்திருக்கும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டன. பின்னர், பிற்பகல் 2.55 மணிக்கு மீண்டும் வெர்சாய் மாளிகை பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது.