ஒரே இரவில் 54,000 மின்னல் தாக்குதல்கள் பதிவு! - பல்வேறு நகரங்களில் வெள்ளப்பாதிப்பு..!
1 ஆவணி 2024 வியாழன் 09:10 | பார்வைகள் : 8829
நேற்று புதன்கிழமை இரவு நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்திருந்தது. ஒரே இரவில் 54,000 மின்னல் தாக்குதல்கள் பதிவானதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
Eure மாவட்டத்தில் உள்ள Évreux நகரில் நேற்று மாலை மாலை 5 மணியில் இருந்து 7.30 மணிக்குள் 40 மி.மீ மழை பதிவாகியிருந்தது. அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீதிகள் தண்ணீரில் மூழ்கின.
Vosges மாவட்டத்தின் பல நகரங்களில் ஒருமணிநேரத்தில் 79.8 மி.மீ மழை பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
Mesnil-Jourdain நகரில் வீடொன்றின் மீது மின்னல் தாக்குதல் ஏற்பட்டு பெரும் சேதத்தினை ஏற்படுத்தியது.
நேற்று இரவு ஒரே நாளில் நாடு முழுவதும் 45,000 மின்னல் தாக்குதல்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை பகல் முழுவதும் வெப்ப அனல் வீசியிருந்தது. அதை அடுத்து நேற்று இரவு பல பகுதிகளில் மழை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan