காணாமல் போன சிறுமி லீனா.. குற்றவாளியை நெருங்கிய காவல்துறை.. சந்தேகநபர் தற்கொலை!

30 ஆடி 2024 செவ்வாய் 10:02 | பார்வைகள் : 9429
பிரான்சின் தெற்கு நகரில் வசிக்கும் லீனா (Lina) எனும் 15 வயதுடைய சிறுமி கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் காணாமல் போயிருந்தார். அன்று 23 ஆம் திகதி காலை Plaine (Bas-Rhin) நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ தொலைவில் உள்ள Saint-Blaise-la-Roche நிலையத்துக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அதன் பின்னர் குறித்த சிறுமி தொடர்சியாக தேடப்பட்டு வந்தார். காவல்துறையினர் ஒவ்வொரு தடயங்களாக சேகரித்தனர்.
இந்நிலையில், தற்போது மகிழுந்து ஒன்றில் லீனாவின் மரபனு தடயங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். Renault Clio ரக குறித்த மகிழுந்தின் உரிமையாளரைக் கண்டறிந்த போது அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் தற்போது குற்றவாளியை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025