வடக்கு பரிசில் இருந்து அகதிகள் வெளியேற்றம்..!!
17 ஆடி 2024 புதன் 11:53 | பார்வைகள் : 20362
பரிசின் வடக்கு பகுதியில் தங்கியிருந்த அகதிகள் பலர் இன்று ஜூலை 17, புதன்கிழமை காலை வெளியேற்றப்பட்டனர்.
Pont de Flandres பகுதியில் இருந்து 150 பேரும் Pont de Stains பகுதியில் இருந்து 80 பேரும் என மொத்தம் 230 அகதிகள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததாகவும், இல் து பிரான்சுக்கு வெளியே அவர்கள் பல்வேறு தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு ஒன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சென்றவருட இறுதியில் இருந்து இந்த அகதி முகாம்கள் அகற்றும் பணி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்றைய இந்த 'வெளியேற்றம்' இடம்பெற்றது.
அதேவேளை, கடந்த மூன்று நாட்களில் 500 அகதிகள் இல் து பிரான்சுக்குள் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan