திருமணத்தில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி.. ஐவர் காயம்!!

30 ஆனி 2024 ஞாயிறு 07:52 | பார்வைகள் : 11378
திருமண நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சின் வடகிழக்கு எல்லை நகரமான moselle இல் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு பிரயோகம் இடம்பெற்றுள்ளது. துருக்கியே மக்கள் செறிந்து வாழும் அப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் ஒன்று இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு அங்கு ஒரு சிறிய விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றது.
அப்போது BMW மகிழுந்து ஒன்றில் வருகை தந்த நபர் ஒருவர் அங்கு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஐவர் காயமடைந்துள்ளார்.
ஆயுதாரி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025