Paristamil Navigation Paristamil advert login

■ இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை.. 31 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

■ இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை.. 31 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

29 ஆனி 2024 சனி 07:28 | பார்வைகள் : 8642


இன்று சனிக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அடை மழை பெய்யக்கூடும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 31 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கையும், 61 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

Ain, Allier, Ardennes, Aube, Aveyron, Bas-Rhin, Cantal, Charente, Charente-Maritime, Cher, Côte-d'Or, Deux-Sèvres, Doubs, Gironde, Haute-Marne, Haute-Saône, Haute-Savoie, Jura, Landes, Lot, Marne, Meurthe-et-Moselle, Meuse, Moselle, Nièvre, Saône-et-Loire, Tarn, Territoire de Belfort, Vienne, Vosges மற்றும் Yonne ஆகிய மாவட்டங்களுக்கே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 110 கி.மீ வேகம் வரை புயலும், சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.