தொடர்பற்ற பணப்பரிவர்த்தனை.. 50 யூரோக்கள் வரை அதிகரிப்பு!
27 ஆனி 2024 வியாழன் 08:56 | பார்வைகள் : 8885
வங்கி அட்டைகளை அதன் இயந்திரத்துடன் தொடர்பிலாமல் கட்டணம் செலுத்துவது (paiement sans contact) அறிந்ததே. NFC தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த பணப்பரிவர்த்தனைக்கு இதுவரை 30 யூரோக்கள் வரை அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதற்போது இந்த தொகை 50 யூரோக்களாக அதிகரித்துள்ளதாக Banque de France அறிவித்துள்ளது. பொருட்களை கொள்வனவு செய்யும் போது 50 யூரோக்கள் வரை இதுபோன்று NFC மூலம் பணம் செலுத்த முடியும்.
பிரான்சில் 86% சதவீதமான பரிவர்த்தனைகள், வங்கி அட்டைகளை அதன் இயந்திரத்திரத்துக்குள் நுழைக்காமல் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan