■ வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம்..!!

25 ஆனி 2024 செவ்வாய் 13:40 | பார்வைகள் : 10427
பாலியல் வல்லுறவு வழக்கில் சிக்கிக்கொண்டுள்ள வலதுசாரி கட்சிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், வரும் வியாழக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
பாராளுமன்ற தேர்தலின் முதலாம் சுற்று வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு மூன்று நாட்ககுக்கு முன்பாக, ஜூன் 27 ஆம் திகதி வியாழக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் Place de la République பகுதியில் இடம்பெற உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளர்கள், ஊடகத்தினர், தொழிற்சங்கங்கள் போன்றவற்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இதேபோன்ற ஆர்ப்பாட்டத்தில் பரிசில் 75,000 பேரும் நாடு முழுவதும் 250,000 பேரும் கலந்துகொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1