Paristamil Navigation Paristamil advert login

அம்மாவுக்கு ஒரு அபிஷேகம்

அம்மாவுக்கு ஒரு அபிஷேகம்

1 சித்திரை 2024 திங்கள் 12:43 | பார்வைகள் : 9434


அம்மா
எங்களின் உள்ளம் உடைந்தது
உதிரம் உறைந்தது உந்தன்
உயிர் மூச்சு நின்றது எனும்
சேதிகேட்டு

அம்மா
பணம் படைத்தவரெல்லாம்
பணக்காரர் அல்ல
அது வெறும் காதிதம்
சுட்டெரித்தால் அது வெண்சாம்பல்
குணம் படைத்தவர்களே
பெரும் பணக்காரர்கள்
நீங்கள் நல் குணம் படைத்தவர்கள்
நல்ல மணங்களை சம்பாதித்தவர்
நீயே பெரும் பணக்காரி

அம்மா..
தமிழ்நாட்டில் ஒரு பெண் சிங்கம்
இருந்தது
வெள்ளை வேட்டிகளை
ஒரு வண்ண முந்தானை தன் கட்டுக்குள் வைத்திருந்தது
அதுபோல
நீயும் ஒரு வீரத்தாய்
எங்களுக்கு அம்மாவாக அப்பாவாக
நல் ஆசானாக இப்போது தெய்வமாக மாறி எங்கள் குடும்பத்தை கட்டிகாக்கிறாய்
மதிக்கிறோம் அம்மா உங்கள் தியாகத்தை...