எழுத்துரு விளம்பரம் - Text Pub |
18 March, 2023, Sat 9:55 | views: 1515
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20-ந்தேதி நடக்கிறது.
வேட்புமனுக்களை 21-ந்தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கோர்ட்டு அறிவுறுத்தலின்படி 50 போலீசார் இரவு, பகலாக சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்31 March, 2023, Fri 17:33 | views: 475
![]() அதிமுக பொதுச்செயலாளர் - தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த ஆவணம்31 March, 2023, Fri 17:27 | views: 466
![]() ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கு : சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை31 March, 2023, Fri 4:52 | views: 1088
![]() அரிய நோய்க்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு - நாளை முதல் அமல்31 March, 2023, Fri 4:48 | views: 1111
![]() அதானி விவகாரத்தில் மோடி அரசு ஏன் இவ்வளவு பயப்படுகிறது? - காங்கிரஸ் கேள்வி31 March, 2023, Fri 4:36 | views: 1087
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |