பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்! - 15 பேர் கைது, 1,077 பேருக்கு குற்றப்பணம்!

29 ஐப்பசி 2023 ஞாயிறு 04:34 | பார்வைகள் : 10472
நேற்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரிசில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்திருந்தனர். பாலஸ்தீன மக்களுக்கான போராட்டத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவான செயற்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டது.
இருந்தபோதும், தடையை மீறி நான்காயிரம் வரையான மக்கள் Place du Châtelet பகுதியில் ஒன்று கூடினார்கள். அவர்களில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
மொத்தமாக 1,077 பேருக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025