இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

30 ஐப்பசி 2023 திங்கள் 14:05 | பார்வைகள் : 7310
இலங்கை அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
இது தொடர்பில் இன்று மாலை அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.