கிழக்கு பிரான்சை தாக்கிய புயல்! - காளான் பறிக்கச் சென்ற பெண் பலி!
30 ஐப்பசி 2023 திங்கள் 06:00 | பார்வைகள் : 18923
பிரான்சின் கிழக்கு நகரங்களை தாக்கி வரும் புயல் காரணமாக பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
Saint-Blaise-La-Roche (Bas-Rhin) நகரில் வசிக்கும் 70 வயதுடைய ஒருவரே பலியாகியுள்ளார். அவர் காளான் பறித்துக்கொண்டிருந்த போது அவர் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்து பலியாகியுள்ளார்.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருந்தபோதும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
Bas-Rhin மாவட்டத்தில் கடும் புயல் மற்றும் மழை காரணமாக நேற்று அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan