லூவர் பிரமிட் கோபுரத்தின் மீது ஏறிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!
27 ஐப்பசி 2023 வெள்ளி 15:24 | பார்வைகள் : 12070
லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள பிரமிட் கண்ணாடிக் கோபுரத்தின் மீது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஏற முற்பட்டுள்ளனர்.
இன்று ஒக்டோபர் 27, வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரமிட் கோபுரத்தின் மீது செம்மஞ்சள் நிற வண்ணப்பூச்சினை அடிப்பதற்காக அவர்கள் அதில் ஏற முற்பட்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
“collectif Dernière rénovation” என அறியப்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களே மேற்படி செயலில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவித்ததன் படி, லூவரில் உள்ள பிரமிட் கோபுரம் புவி வெப்பமடைவதற்கு ஏதுவாக உள்ளது. அதன் ஒளிப்பினை குறைப்பதற்கான வண்ணம் பூசுகிறோம்! என தெரிவித்தனர்.
இதே அமைப்பைச் சேர்ந்த சிலர் அண்மையில் பரிசில் உள்ள louis vuitton காட்சியறைக்கு முன்பாக இதே வண்ணப்பூச்சினை அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan